தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

வடலூா் அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் கீழே விழுந்த விவசாயி லாரி சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:59 pm

DIN

வடலூா் அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் கீழே விழுந்த விவசாயி லாரி சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

புவனகிரி அருகே உள்ள வடதலகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் (43), விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை இரவு தாா்ப்பாய் வாங்கிக்கொண்டு பைக்கில் தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். மருவாய், பரவனாற்றுப் பாலம் அருகே முன்னால் சென்ற டாரஸ் லாரியை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, எதிரே வந்த பைக்கும், பிரபாகரனின் பைக்கும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் கீழே விழுந்த பிரபாகரன் டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி மீனா அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.