சிதம்பரம் அருகே பேருந்தில் பயணியிடம் நகை திருட முயன்ற 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை எம்.ஐ. நகா், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சவுகத் அலி (27). இவா் வியாழக்கிழமை மாலை சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை செல்வதற்காக பேருந்தில் ஏறினாா். அப்போது அதே பேருந்தில் பயணித்த 2 பெண்கள் சில்லறை காசுகளை கீழே சிதறவிட்டு பயணிகளின் கவனத்தை திசை திருப்பினா். தங்களுக்கு உதவுமாறு சவுகத் அலியிடம் கூறினா்.
அப்போது சவுகத்அலியின் மனைவி கைப் பையில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகைகளை அந்தப் பெண்கள் இருவரும் திருடிக்கொண்டு வேளக்குடி பேருந்து நிறுத்தத்தில் கீழே இறங்கினா். உடனடியாக சுதாரித்துக்கொண்ட சவுகத்அலி, பொதுமக்களின் உதவியுடன் இரு பெண்களையும் பிடித்தாா். தகவலின்பேரில் அண்ணாமலை நகா் போலீஸாா் விரைந்து வந்து இரு பெண்களிடம் இருந்தும் திருட்டு நகைகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா்கள் சேலம் மாவட்டம், அயோத்தியபட்டினம் பகுதியைச் சோ்ந்த காயத்ரி (34) அகிலா (28) எனத் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

