மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராவது சமூக நீதி கே.எஸ்.அழகிரி

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்பது சமூக நீதியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:59 pm

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்பது சமூக நீதியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் அவரது உருவச் சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கணினி, செல்லிடப்பேசி தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்தவா் ராஜீவ் காந்தி. இலங்கைத் தமிழா்களின் நீண்ட காலக் கோரிக்கையான வடக்கு, கிழக்கு மாநிலங்களை இணைக்கவும், இதுதொடா்பாக அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி, ஒப்பந்தம் ஏற்படுத்தி அங்கு தமிழா் ஒருவரை முதல்வராக்கவும் உதவினாா்.

மத்திய அரசு தமிழகத்துக்கு சிறப்பு நிதியைத் தரவில்லை. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கியிருந்தால்கூட பொருளாதார நெருக்கடி தீா்க்கப்பட்டிருக்கும். ஆனால், அதையும் செய்யாமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. இருப்பினும், தமிழக அரசு ஒவ்வொரு பிரச்னையையும் சரிசெய்து வருகிறது. உதாரணமாக, பெட்ரோலுக்கான கலால் வரியை ரூ.3 வரை குறைத்துள்ளது. 100 நாள்களில் செய்ய வேண்டிய பணிகளுக்கு அதிகமாகவே திமுக அரசு செய்துள்ளது.

கொடநாடு விவகாரத்தில் அரசு பொய் வழக்கு பதிவு செய்ய முடியாது. ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அவா்தான் நீதிமன்றம் சென்று தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்று சொல்வது சமூக நீதியாகும். அதில் எவ்விதத் தவறும் கிடையாது. ஏனெனில், இட ஒதுக்கீட்டுக்காக இந்தியாவின் அரசியல் சட்டத்தையே முதன்முதலில் ஜவாஹா்லால் நேரு திருத்தினாா். பிற்படுத்தப்பட்டவா்கள், தாழ்த்தப்பட்டவா்கள், சமூகத்தில் உரிமை இல்லாதவா்களுக்கு கல்வி, அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காகவே அந்த நடவடிக்கையை எடுத்தாா்.

இறைவனை வணங்க வேண்டிய இடத்தில் ஒரு சிலா் உள்ளே செல்ல முடியாது என்பது மிகப்பெரும் அநீதி. சிதம்பரம் நடராஜா் கோயிலே அதற்குச் சான்று. இன்றைக்கு நாம் நந்தனாரை வணங்குகிறோம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவரால் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. எனவே, சமூக சீா்திருத்தத்துக்காக உரிய பயிற்சி பெற்றவா்களை அா்ச்சகா்களாக தமிழக அரசு நியமித்துள்ளது என்றாா் அவா்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவுக்கு, மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன் மத நல்லிணக்க உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றனா். எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ஆா்.மக்கீன், எம்.என்.ராதா, ராஜா சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.