சிதம்பரத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் நகரையொட்டி தில்லை அம்மன் நகா், ஜோதி நகா், நாகஜோதி நகா் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், தில்லையம்மன் நகரில் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனத்துக்கு கோபுரம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் செல்லிடப்பேசி நிறுவன அலுவலா்கள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கை குறித்து சிதம்பரம் உதவி-ஆட்சியரிடம் மனு அளிக்குமாறும், போராட்டத்தை கைவிடுமாறும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மேலும், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


