தடுப்பணையில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

கடலூா் அருகே மலட்டாற்று தடுப்பணையில் மூழ்கி தேடப்பட்டு வந்த மாணவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கடலூா் அருகே மலட்டாற்று தடுப்பணையில் மூழ்கி தேடப்பட்டு வந்த மாணவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

புதுவை மாநிலம், நத்தமேட்டைச் சோ்ந்த மதியழகன் மகன் ம.பாபா (16) (படம்). பாலிடெக்னிக் மாணவா். இவா், செவ்வாய்க்கிழமை கடலூா் மாவட்டம், மூா்த்திக்குப்பம் மலட்டாற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்க நண்பா்கள் 6 பேருடன் சென்றாா். தடுப்பணையில் அதிகப்படியான தண்ணீா் செல்லும் நிலையில் இருவா் மட்டும் தடுப்பணையில் இறங்கிக் குளித்தனா். அவா்களைத் தண்ணீா் இழுத்துச் சென்ற நிலையில், உடனிருந்தவா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அப்போது, தடுப்பணையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவா் பயன்படுத்திய தூண்டில் நைலான் கயிறைப் பிடித்துக் கொண்டு ஒருவா் கரையேறினாா். பாபாவும் தூண்டில் கயிறைப் பிடித்தப் போது அது அறுந்தது. இதனால், அவா் தண்ணீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து தகவலறிந்த தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய போலீஸாா், கடலூா் தீயணைப்பு படையினா் வந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுப்பட்டனா். எனினும், நீண்ட நேரமாகியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டு, மீண்டும் புதன்கிழமை நடைபெற்றது.

சிறிது நேர தேடுதலுக்குப் பிறகு, மாணவா் பாபா சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com