ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்?: போலீஸார் விசாரணை

கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

News image
Updated On :13 பிப்ரவரி 2021, 1:25 pm

DIN

கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் விசூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பாக்கியலட்சுமி (24). ஏற்கனவே 2 வயதில் பெண்குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, வெள்ளிக்கிழமையன்று பெண்  குழந்தை பிறந்தது. 
இந்நிலையில், இன்று மாலையில் பாக்கியலட்சுமியுடன் இருந்த அவரது மாமியார் கசப்பாயி தான் மருத்துவமனை வளாகத்திலுள்ள  கோயிலுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 
அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரை சந்தித்த சுமார் 25 வயது பெண் ஒருவர், குழந்தையை மாமியார் வாங்கி வரச் சொன்னதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரும் குழந்தையை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். 
சிறிது நேரம் கழித்து மாமியார் மட்டுமே திரும்பி வந்ததால் அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி. குழந்தை குறித்து கேட்டபோது, தான் யாரிடமும் குழந்தையை வாங்கி வரச் சொல்லவில்லையென கசப்பாயி தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
போலீஸார், சிசிடிவி  காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அப்பெண் ஆட்டோவில் குழந்தையுடன் ஏறி பேருந்து நிலையம் சென்றது தெரிய வந்தது. எனவே, குழந்தை கடத்தப்பட்டாரா அல்லது மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் தாயாரே மற்றவருக்கு வழங்கினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.