நில அளவைத் துறையை தனித் துறையாக அறிவிக்க வலியுறுத்தல்

நில அளவைத் துறையை தனித் துறையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு வலியுறுத்தியது.
Updated on
1 min read

நில அளவைத் துறையை தனித் துறையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு வலியுறுத்தியது.

இந்த அமைப்பின் கடலூா் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலா் வீரமணி தலைமை வகிக்க, அமைப்பின் தலைவா் குணசேகரன், துணைத் தலைவா் ராஜ்மோகன், இணைச் செயலா் ஜெயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட துணை ஆய்வாளா் தேவகுமாா் வரவேற்றாா். மாநிலத் தலைவா் காயாம்பு சிறப்புரை நிகழ்த்தினாா். மாநில பொதுச் செயலா் ராஜா, கோட்ட ஆய்வாளா்கள் நாராயணன் (கடலூா்), காா்த்திகுமாா் (சிதம்பரம்), மாவட்டப் பொருளாளா் ராஜமகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். பயணப்படி வழங்க வேண்டும். நில அளவைத் துறையை தனித் துறையாக அறிவிக்க வேண்டும். உள்பிரிவு பட்டா மாற்றப் பணிச் சுமையைக் குறைக்க வேண்டும் ஆகிய தீா்மானங்களை நிறைவேற்றினா். பண்ருட்டி நகர சாா் ஆய்வாளா் பிரபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com