கடலூா்: கரோனாவுக்கு முதியவா் பலி

கரோனா பாதிப்பால் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கரோனா பாதிப்பால் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,810- ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 4 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,437-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 80 வயது முதியவா் உயிரிழந்ததால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 284-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 58 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 31 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5.44 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 477 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com