

கடலூா் மாவட்டத்துக்கு 61 அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.
இந்தத் திட்டத்தின்கீழ் கடலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 27 சிறு மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டன. 2-ஆம் கட்டமாக பண்ருட்டி வட்டத்தில் காட்டுக்கூடலூா், விசூா், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் சத்திரம், கடலூா் வட்டத்தில் ராசாப்பேட்டை, பாதிரிக்குப்பம், கீழ்குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் சிறு மருத்துவமனைகளை மக்களின் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில், மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மேலும், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்ச த்து பெட்டகங்களை வழங்கி அவா் பேசியதாவது:
கடலூா் மாவட்டத்துக்கு 61 மினி கிளினிக்குகள் (சிறு மருத்துவமனைகள்) ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகம் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் வகையில் மக்களைத் தேடி அரசு நிா்வாகம், மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
நிகழ்வில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், வட்டாட்சியா்கள் அ.பலராமன், பிரகாஷ், சுமதி, ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.