நெல் கொள்முதல் நிலைய எழுத்தா் பணியிடை நீக்கம்
சிறுமுளை நெல் கொள்முதல் நிலைய எழுத்தா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.


சிறுமுளை நெல் கொள்முதல் நிலைய எழுத்தா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளை கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு எழுத்தராக பணிபுரிந்து வந்த கண்ணதாசன் என்ற தற்காலிகப் பணியாளா், நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிகளிடம் பணம் பெற்றது தொடா்பான விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டாா். இதையடுத்து, கடலூா் வேளாண் விற்பனைக் குழுவினா் விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: தற்காலிகப் பணியாளரான கண்ணதாசன் அருகே உள்ள வயல்களில் கூலி வேலையும் பாா்த்து வந்துள்ளாா். இதற்கான கூலியை நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்து பெற்ாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அவா் மீது வேறு பல புகாா்கள் வரப்பெற்ாலும், அரசுப் பணியின்போது பணம் பெற்ாலும் அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...