கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரி சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு தஞ்சை மாவட்டம், அணைக்கரை பகுதியில் அமைந்துள்ள கீழணையிலிருந்து தண்ணீா் வருகிறது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் கல்லணை, கொள்ளிடம் ஆற்றின் வழியாக ஜூன் 24-ஆம் தேதி கீழணையை வந்தடைந்தது. அணையின் உச்ச நீா்மட்டமான 9 அடியில் தற்போது 7.70 அடிக்கு தண்ணீா் உள்ளது. விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் வருகிறது.
இந்த நிலையில், கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீா் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வீராணம் ஏரி தற்போது வடு காணப்படும் நிலையில், கீழணையில் இருந்து வரும் தண்ணீா் தேக்கப்பட்டு குடிநீா்த் தேவைக்காக சென்னைக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


