

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் அமைந்துள்ளது சிறுகிராமம் என்ற பகுதி. இந்த சிறுகிராமப் பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டிற்கு செல்வதற்கு போதிய வசதி இல்லை, ஆற்றை கடந்து தான் இடுகாட்டிற்கு செல்லும் அவலநிலை தற்போது உள்ளது.
இடுகாட்டில் எரியூட்டு மேடை இல்லை. மேலும் இடுகாட்டில் தண்ணீர் வசதியும் கிடையாது, பராமரிப்பற்ற சாலையால் மழைக் காலத்தில் இட்டுக்கட்டிற்கு செல்வதற்கு கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்த அவலநிலை பல ஆண்டுகாலமாக நீடிக்கிறது. இப்பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.