தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பண்ருட்டி அருகே ஆற்றைக் கடந்து இடுகாட்டுக்குச் செல்லும் அவல நிலை

சிறுகிராமப் பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டிற்கு செல்வதற்கு போதிய வசதி இல்லை, ஆற்றை கடந்து தான் இடுகாட்டிற்கு செல்லும் அவலநிலை தற்போது உள்ளது.

News image

பண்ருட்டி அருகே ஆற்றைக் கடந்து இடுகாட்டுக்குச் செல்லும் அவல நிலை

Updated On :20 ஜூலை 2021, 7:08 am

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் அமைந்துள்ளது சிறுகிராமம் என்ற பகுதி. இந்த சிறுகிராமப் பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டிற்கு செல்வதற்கு போதிய வசதி இல்லை, ஆற்றை கடந்து தான் இடுகாட்டிற்கு செல்லும் அவலநிலை தற்போது உள்ளது.

இடுகாட்டில் எரியூட்டு மேடை இல்லை. மேலும் இடுகாட்டில் தண்ணீர் வசதியும் கிடையாது, பராமரிப்பற்ற சாலையால் மழைக் காலத்தில் இட்டுக்கட்டிற்கு செல்வதற்கு கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

Story image

இந்த அவலநிலை பல ஆண்டுகாலமாக நீடிக்கிறது. இப்பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.