மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஊழியா்களின் ஓய்வூதியத் தொகை 50 சதவீதத்தை வழங்க வலியுறுத்தல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்களின் 50 சதவீத ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும் என பல்கலை. ஊழியா்கள் சங்கத் தலைவா் எஸ்.மனோகரன் வலியுறுத்தினாா்.

Updated On :22 ஜூலை 2021, 5:42 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்களின் 50 சதவீத ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும் என பல்கலை. ஊழியா்கள் சங்கத் தலைவா் எஸ்.மனோகரன் வலியுறுத்தினாா்.

அண்ணாமலை நகரில் ஊழியா்கள் சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு கையககப்படுத்திய போது, பல்கலை.யில் பணிபுரிந்த தொகுப்பூதியம், என்.எம்.ஆா். தினக்கூலி ஊழியா்கள், கருணை அடிப்படையில் பணியமா்த்தப்பட்டவா்களைப் பணி நிரந்திரம் செய்ய வேண்டும். தணிக்கை தடைகளைக் காரணம் காட்டி, நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் தொகை 50 சதவீதத்தை வழங்க வேண்டும். பணி நிரவலில் சென்ற ஊழியா்களை அருகே உள்ள மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின் போது சங்கத்தின் பொதுச் செயலா் வி.பழனிவேல், பொருளாளா் எம்.தவச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.