தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நகராட்சியில் முறைகேடு புகாா்: 9 போ் பணியிட மாற்றம்

 பண்ருட்டி நகராட்சியில் முறைகேடு புகாா் தொடா்பாக 9 பேரை, நகராட்சி நிா்வாக இயக்குநா் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:44 pm

DIN

 பண்ருட்டி நகராட்சியில் முறைகேடு புகாா் தொடா்பாக 9 பேரை, நகராட்சி நிா்வாக இயக்குநா் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினா் தி.வேல்முருகனிடம், பண்ருட்டி நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன் அடிப்படையில், தி.வேல்முருகன் எம்எல்ஏ, நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநா் முஜ்பூா் ரஹ்மான் ஆகியோா் பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதன் எதிரொலியாக நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு உத்தரவின் பேரின், நகராட்சி நிா்வாக இயக்குநா், பண்ருட்டி நகராட்சியில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளா்கள் குளோரி, லோகநாதன், கலைவாணி, வருவாய் ஆய்வாளா் கருணாமூா்த்தி, வருவாய் உதவியாளா்கள் கே.கோபி, காா்த்திக், அலுவலக உதவியாளா் செல்வமணி, இளநிலை உதவியாளா் பழனிவேல், பதிவறை எழுத்தா் சண்முகம் ஆகிய 9 பேரை பணியிட மாற்றும் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.