சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபாதை வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரத்தில் 4 வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன. இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி நடைபாதை வியாபாரிகள் நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்த நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்றது. நகரமைப்பு அலுவலா் ரகுநாதன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினா், வா்த்தக சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நகராட்சி ஆணையா் பேசியதாவது:
சிதம்பரத்தில் உள்ள 4 வீதிகளில் கீழவீதியைத் தவிர மற்ற வீதிகளில் நடைபாதை கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே நடைபாதை வியாபாரிகள் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி தங்களது கடைகளை வைத்துக்கொள்ள வேண்டும். காசுக்கடைத் தெருவில் நடைபாதை கடைகள் வைக்க அனுமதியில்லை. அங்குள்ள கடைகளின் உரிமையாளா்கள் தங்களது கடைகளை உள் வாடகைக்கு விடுவதைத் தவிா்க்க வேண்டும். சிதம்பரத்தில் உள்ள நடைபாதை கடைகள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை சமா்ப்பிக்க தனி அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

