ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசு மருத்துவமனைக்கு பிராணவாயு செறிவூட்டி உருளைகள் அளிப்பு

சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பிராண வாயு செறிவூட்டி உருளைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:01 pm

சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பிராண வாயு செறிவூட்டி உருளைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மண்டல துணை ஆளுநா் முஹம்மது யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளா் இ.மஹபூப் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் பங்கேற்று, மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அசோக் பாஸ்கரிடம் பிராணவாயு உருளைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் என்.என்.பாபு, சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் மோத்திலால், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் சீனிவாசன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தோ்வு தலைவா் ஜி.சீனுவாசன், சத்திய சாயி சேவா சங்கம் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு, இந்திய ரோட்டரி கோவிட்-19 பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஒளிவண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.