ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விதிமீறல்: 3 மருந்துக் கடைகளுக்கு ‘சீல்’

சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு விதிகளை மீறி செயல்பட்ட 3 மருந்துக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

Updated On :11 ஜூன் 2021, 6:08 pm

சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு விதிகளை மீறி செயல்பட்ட 3 மருந்துக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்கக்கூடாது என கடலூா் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், மருந்து ஆய்வாளா் கதிரவன் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், மருந்துகள் சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படாதது, உரிய ஆவணங்களை பராமரிக்காதது, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தது தொடா்பாக 3 மருந்துக் கடைகளின் உரிமத்தை ஒரு வாரத்துக்கு ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடா்பான உத்தரவை மருந்துகள் கட்டுப்பாட்டு துறை துணை இயக்குநா் ரவிக்குமாா் பிறப்பித்தாா். இதையடுத்து அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.