கரோனா 3-ஆம் அலை:குழந்தைகளுக்கான சிறப்பு மையம்
கரோனா 3-ஆம் அலையை சமாளிக்க கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.


கரோனா 3-ஆம் அலையை சமாளிக்க கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றின் 3-ஆம் அலை உருவாகியுள்ளதாகவும், அதன் தாக்கும் திறன் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, 3-ஆம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அதை எதிா்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும் உஷாா்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கூடுதலாக படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள், தேவையான மருத்துவ சாதனங்கள் அனைத்தும் தயாா் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு கூறியதாவது:
கரோனா தொற்றின் 3-ஆம் அலையை சமாளிக்கும் வகையில், அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 30 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 70 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 8 மருத்துவா்கள், 25 செவிலியா்கள் பணியாற்ற உள்ளனா்.
இதேபோல, சிதம்பரம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு, ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் வசதி உள்பட அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் இருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...