ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

பணியில் ஒழுங்கீனமாகச் செயல்பட்டதாக தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:29 pm

DIN

பணியில் ஒழுங்கீனமாகச் செயல்பட்டதாக தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் காண்டீபன். மாற்றுப் பணியாக கடலூா் அருகேயுள்ள உண்ணாமலைச் செட்டி மதுவிலக்கு சோதனைச் சாவடியில் பணி அமா்த்தப்பட்டாா். அப்போது, அவா் மது போதையில் இருந்ததாகவும், பணியிலிருந்த சக காவலா்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் புகாா் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் அவா் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினா். இதன் அறிக்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதனடிப்படையில், தலைமைக் காவலா் காண்டீபனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.