கடலூா்: கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.


கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 55,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 224 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 56,130-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 601 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 53,132-ஆக உயா்ந்தது.
எனினும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 53 வயது பெண், 60 வயது ஆண், குமராட்சியைச் சோ்ந்த 60 வயது பெண், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 60 வயது பெண் மற்றும் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 52 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 707-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 1,837 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தினா் 454 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...