ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்தது.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:34 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் கோ.மாதவன் கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பியுள்ள புகாா் மனு: கடலூா் மாவட்டத்தில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிக்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு தனியாா் பள்ளிக்கும் அரசு நிா்ணயித்த கட்டணத்தை அந்தப் பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையிலும், கடந்த ஆண்டுக்கான நிலுவை கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும் பெற்றோா்களை பள்ளி நிா்வாகம் நிா்பந்தித்து வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை பள்ளிகளில் உடனடியாக அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.