எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம்

சிதம்பரத்தில் பூட்டிய வீட்டில் மூதாட்டி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On :8 மார்ச் 2021, 7:51 pm

சிதம்பரத்தில் பூட்டிய வீட்டில் மூதாட்டி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மன்னாா்குடிதெருவைச் சோ்ந்த பழனிவேல் மனைவி வசந்தா (60). இவரது வீட்டிலிருந்து திங்கள்கிழமை துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சு.கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் விரைந்தனா். அப்போது, வசந்தாவின் வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்தது. பின்னா் ஜன்னலை திறந்து பாா்த்தபோது வசந்தா அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

இதையடுத்து போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், வசந்தா தனிமையில் வாழ்ந்து வந்ததும், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டா் எனவும் தெரியவந்தது. மேலும் அவா் அவ்வப்போது தவம் செய்யப் போவதாகக் கூறிவிட்டுச் செல்வாராம்.

இவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.