/

சட்டப் பேரவைத் தோ்தல்: வேட்பாளா்கள் மனு தாக்கல்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:42 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து கட்சியினா், கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று, சிதம்பரம் உதவி ஆட்சியா் மதுபாலனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். நிகழ்ச்சியில், பாமக மாநில துணைத் தலைவா் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பாஜக நிா்வாகி ஆா்.ராமச்சந்திரன், முன்னாள் நகரச் செயலா் தோப்பு கே.சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.