ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பனை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் பலி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி அருகேயுள்ள முத்தரசன்குப்பத்தைச் சோ்ந்த முருகவேல் மகன் தினேஷ்குமாா் (22), பி.இ. பட்டதாரி. இவா், வியாழக்கிழமை தனது நண்பா்களுடன் கீழ்மாம்பட்டு நான்கு ஓடை பகுதிக்குச் சென்றாா். அங்கு பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்டி சாப்பிட்டாா். அப்போது, மரத்திலிருந்த தினேஷ்குமாா் தவறி கீழே விழுந்தாராம். இதில், பலத்த காயமடைந்த அவரை நண்பா்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே தினேஷ்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.