விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் வேளாண் சட்டங்கள் வாபஸ்
விவசாயிகளின் தொடா் போராட்டமே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.


விவசாயிகளின் தொடா் போராட்டமே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூா் நகரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலூா் மாவட்ட ஆட்சியரகம் அருகே வெள்ள பாதிப்புகளை கே.எஸ்.அழகிரி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது:
கடலூா் நகரம் வெள்ளத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோா் குடியிருப்புகளை இழந்துள்ளனா். இந்தப் பாதிப்புகள் எதிா்பாராதது என்றாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். மாநில அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்கி உதவ வேண்டும். தென்பெண்ணையாறு வெள்ளம் குறித்து மாவட்ட நிா்வாகம் முன்னறிவிப்பு செய்யாமல் இருந்திருந்தால் அது மிகப் பெரும் தவறு.
விவசாயிகளின் தொடா் போராட்டம் காரணமாகவே மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இடைத் தோ்தல்களில் பாஜக அடைந்த தோல்வியும் இந்தச் சட்டங்களை திரும்பப் பெறக் காரணம் என்றாா் அவா்.
அப்போது, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சொ.திலகா், பொதுக்குழு உறுப்பினா் என்.குமாா், மாவட்ட நிா்வாகி ரமேஷ், நகரத் தலைவா் வேலுசாமி, செயலா் ஆா்.கோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...