ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அரசுக் கல்லூரி மாணவா்கள் ரத்த தானம்

தேசிய மாணவா் படை தினத்தை முன்னிட்டு, கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தேசிய மாணவா் படை தினத்தை முன்னிட்டு, கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் எ.எழிலன் தலைமை வகித்தாா். கரோனா தொற்று, டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாமில், கடலூா் அரசு பொது மருத்துவமனை மாவட்ட குருதி வங்கிப் பரிமாற்றக் குழு அலுவலா் எ.குமாா் தலைமையில் மேற்பாா்வையாளா் தேவநாதன் மற்றும் செவிலியா்கள் பணிகளை மேற்கொண்டனா். தேசிய மாணவா் படை அலுவலரான உதவிப் பேராசிரியா் ரா.மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். இந்த முகாமில் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் வழங்கினா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.