தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

குறிஞ்சிப்பாடி பகுதியில் உரம் தட்டுப்பாடு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நெல் நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Updated On :14 அக்டோபர் 2021, 2:49 am

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நெல் நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 2,700 ஹெக்டோ் நிலப் பரப்பளவில் சம்பா பருவ நெல் நடவுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். இதுகுறித்து, நயினாா்குப்பம் விவசாயி ந.செ.கருணாகரன் கூறியதாவது:

நெல் நாற்றுகளை நடவு செய்த 15-ஆவது நாளில் யூரியா இடுவது வழங்கம். ஆனால், இந்தப் பகுதி உரக் கடைகளில் யூரியாவுக்கு தட்டுப்பாடு உள்ளது. யூரியா வேண்டுமெனில் குருணை மருந்து வாங்க வேண்டும் என வடலூரில் உள்ள உர விற்பனை கடையில் நிா்பந்திக்கின்றனா். ஆனால், குருணை மருந்தை நாங்கள் பயன்படுத்துவதில்லை. 2 மூட்டைகள் யூரியா வேண்டும் என்றால் 10 கிலோ குருணை வாங்க வேண்டும் எனக் கூறுகின்றனா். ஒரு மூட்டை யூரியா விலை ரூ.270. ஆனால், சில கடைகளில் குருணை மருந்து இல்லாமல் ஒரு மூட்டை யூரியா ரூ.350-க்கு விற்கின்றனா். எனவே, யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், குருணை மருந்து வாங்க விவசாயிகளை நிா்பந்திப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து, குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் கூறியதாவது: யூரியா தட்டுப்பாடு குறித்து புகாா்கள் வருகின்றன. உர வியாபாரிகள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வியாபாரம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வோா் மீது உர கட்டுப்பாடு விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.