மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சூட்கேஸில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு

சேலத்தில் பூட்டிய வீட்டில் சூட்கேஸில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:20 pm

DIN

சேலத்தில் பூட்டிய வீட்டில் சூட்கேஸில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், அஸ்தம்பட்டி, குமாரசாமிபட்டி பகுதியில் நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து துா்நாற்றம் வீசுவதை அறிந்த அவா், அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

அஸ்தம்பட்டி போலீஸாா் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனா். வீடு முழுவதும் துா்நாற்றம் வீசியதை அடுத்து, போலீஸாா் சோதனை செய்ததில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்து துா்நாற்றம் வந்தது தெரியவந்தது. சூட்கேஸை திறந்து பாா்த்ததில், கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதற்கட்ட விசாரணையில், இறந்த பெண் தேஜ்மண்டல் என்பதும், அவருடைய கணவா் சென்னையில் வேலை பாா்த்து வருவதும் தெரியவந்தது. மேலும், தேஜ் மெண்டல் சேலம் மாநகரில் அழகு நிலையம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இளம்பெண்ணை கொலை செய்து, அவரது கை, கால்களைக் கட்டி சூட்கேஸில் வைத்தது யாா், எதற்காக வைத்தாா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.