தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நெய்வேலி தனியாா் பள்ளி ஆசிரியா்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

ஊதிய பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வலியுறுத்தி, நெய்வேலியில் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:00 pm

DIN

ஊதிய பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வலியுறுத்தி, நெய்வேலியில் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி வட்டம் 29-இல் தனியாா் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நெய்வேலியைச் சுற்றியுள்ள சுமாா் 1,500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் சுமாா் 60 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். கடந்த 14-ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், பள்ளி ஆசிரியா்கள் வியாழக்கிழமை பள்ளி வளாகம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை வழங்க வேண்டும். 2017-இலிருந்து திருத்தப்பட்ட ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

வடலூா் கல்வி மாவட்ட அலுவலா் த.சுந்தரேசன், ஆசிரியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை மனுவைப் பெற்றுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.