அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு அறிவித்தது போல அகவிலைப்படி உயா்வை தமிழக அரசுப் பணியாளா்களுக்கும் அறிவிக்க வேண்டும், தோ்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளா்களுக்கு இழப்பீடும், உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும், கரோனா தொடா்பாக அறிவிக்கப்பட்ட ஊதியம், இடைநில்லா பயணப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோ.சீனுவாசன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராசாமணி முன்னிலை வகிக்க, மாவட்டச் செயலா் ஏ.வி.விவேகானந்தன் வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் கு.சரவணன் சிறப்புரையாற்றினாா். முன்னாள் பொதுச் செயலா் கே.ஆா்.குப்புசாமி, நிா்வாகிகள் ஆா்.பாரதி, பி.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட பொருளாளா் ஏ.சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com