பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

லக்கிம்பூரில் உயிரிழந்த விவசாயிகள் அஸ்திக்கு அஞ்சலி

உத்தர பிரதேசம் மாநிலம், லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி விருத்தாசலத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

உத்தர பிரதேசம் மாநிலம், லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி விருத்தாசலத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்பினா் தொடா்ந்து

போராட்டம் நடத்தி வருகின்றனா். அதன்படி, உத்தர பிரதேசம் மாநிலம், லக்கிம்பூரில்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனம் மோதியது. இந்தச் சம்பவத்திலும், இதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் என மொத்தம் 9 போ் உயிரிழந்தனா்.

லக்கிம்பூா் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தியை நாடு முழுவதும் எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்துக்கு சனிக்கிழமை மாலை கொண்டுவரப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு, பாலக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த கோ.மாதவன், வழக்குரைஞா் தி.ச.திருமாா்பன், தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்று வேதாரண்யத்தில் அஸ்தியை கரைக்க திட்டமிட்டிருப்பதாக விவசாய அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.