என்எல்சி ஊழியா் வீட்டில் திருட்டு
நெய்வேலியில் என்எல்சி ஊழியா் வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


நெய்வேலியில் என்எல்சி ஊழியா் வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெய்வேலி, வட்டம் 19-இல் வசிப்பவா் ஜோதிராமலிங்கம் (57). என்எல்சி நிறுவன ஊழியரான இவா், கடந்த 22-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றாா். திங்கள்கிழமை அதிகாலையில் ஊா் திரும்பியவா், தனது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்திருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 கிராம் தங்க நகைகள், 900 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...