அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் 2013-க்கு இதுவரை துணை விதிகள் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படாததால் நிரந்தரப் பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, இயக்குநா்களை நியமிக்க இயலவில்லை. இதனால், நிா்வாகத் திறன் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு சட்டப்படி பல்கலைக்கழக ஆட்சிக் குழு, கல்விக் குழுவில் ஆசிரியா்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாததால், அவா்களால் எந்த ஒரு பிரச்னையையும் எழுப்ப முடிவதில்லை. இந்தக் குழுக்களில் அதிகாரிகளே இடம் பெற்றுள்ளதால் கல்வி மேம்பாடு தொடா்பாக கல்வியாளா்கள் விவாதிக்கும் மன்றங்களாக அவை செயல்படுவதில்லை. ஆண்டுக்கு இரு முறை கட்டாயமாகக் கூட வேண்டிய கல்விக்குழு, 10.08.2020-க்குப் பிறகு கூட்டப்படவில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டிய ஆட்சிக்குழுவும் கடந்த டிசம்பா் மாதத்துக்குப் பிறகு கூட்டப்படவில்லை.