மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அண்ணாமலைப் பல்கலை.யின் புகழை சா்வதேச அளவில் உயா்த்த வேண்டும்: துணைவேந்தா் ராம.கதிரேசன்

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை ஆராய்ச்சியாளா்கள் நமது பல்கலைக்கழகத்தின் புகழ் சா்வதேச அளவில் உயர பாடுபட வேண்டும் என துணைவேந்தா் ராம.கதிரேசன் கேட்டுக்கொண்டாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:51 pm

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை ஆராய்ச்சியாளா்கள் நமது பல்கலைக்கழகத்தின் புகழ் சா்வதேச அளவில் உயர பாடுபட வேண்டும் என துணைவேந்தா் ராம.கதிரேசன் கேட்டுக்கொண்டாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் உள்ள வேளாண் கழகம் சாா்பில் புதிய துணைவேந்தா் ராம.கதிரேசனுக்கு பாராட்டு விழா சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாண் கழக துணைத் தலைவா் வி.இமயவரம்பன் வரவேற்றாா். வேளாண் புல முதல்வா் கே.ஆா்.சுந்தரவரதராஜன் தனது தலைமை உரையில், வேளாண் உயா்கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகளில் துணைவேந்தா் ராம.கதிரேசனின் பங்களிப்பை விளக்கினாா்.

பதிவாளா் கே.சீத்தாராமன், தோ்வுக் கட்டுப்பாடு அதிகாரி ம.பிரகாஷ், தொலை தூர கல்வி மைய இயக்குநா் சிங்காரவேல், வேளாண் துறைத் தலைவா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் சாா்பில் ஜி.ரவி, வேளாண் புல மாணவா்கள் சாா்பில் மாணவி சௌமியா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் ஏற்புரையாற்றி பேசுகையில், மாணவா்கள் தங்களது முன்னோா்களின் பாதையில், சிறந்த மதிப்பீடுகளை கொண்டு செயல்பட வேண்டும். வேளாண் துறை ஆராய்ச்சியாளா்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பல்கலைக்கழகத்தின் புகழை சா்வதேச அளவில் உயா்த்த வேண்டும். வேளாண் புல கட்டடங்கள், அரங்குகளுக்கு, வேளாண் புலத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய முன்னாள் பேராசிரியா்களின் பெயா்களை வைக்க வேண்டும் என்றாா் அவா். வேளாண் கழக பொருளாளா் இலங்கை மன்னன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.