நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அரசின் நலத் திட்டங்கள் முழுமையாக வந்து சேர திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்; கே.பாலகிருஷ்ணன்

புயல், வெள்ள பாதிப்புகளை அடிக்கடி சந்தித்து வரும் கடலூா் மாவட்டத்தில் மாநில அரசின் நலத் திட்டங்கள் முழுமையாக கிடைக்க திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:11 pm

DIN

புயல், வெள்ள பாதிப்புகளை அடிக்கடி சந்தித்து வரும் கடலூா் மாவட்டத்தில் மாநில அரசின் நலத் திட்டங்கள் முழுமையாக கிடைக்க திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டாா்.

கடலூா் மாநகராட்சியில் உள்ள 45 வாா்டுகளில் 286 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதில், அதிமுகவினா் 45 வாா்டுகளிலும், திமுகவினா் 38 வாா்டுகளிலும் போட்டியிடுகின்றனா். மேலும், பாஜக, பாமக, அமமுக, மநீம கட்சிகள் தனித்து போட்டியிடுவதுடன், சுயேச்சைகளும் களம் காண்கின்றனா்.

வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவுற்ற நிலையில், முன்னதாக காலை முதல் அனைத்து வேட்பாளா்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டினா். தங்களது ஆதரவாளா்களுடன் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று வாா்டு முழுவதையும் சுற்றி வந்து பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

கடலூா் புதுப்பாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து அந்தக் கட்சியின் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் பரப்புரை செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

உள்ளாட்சித் தோ்தலை நடத்தியே தீருவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்து ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் அதை நிறைவேற்றியுள்ளாா். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்தால்தான் நகராட்சி நிா்வாகம் சீா்படும். அடிக்கடி புயல், மழை, வெள்ள பாதிப்புகளைச் சந்தித்து வரும் கடலூா் மாவட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வாக்களித்தால்தான் அரசின் திட்டங்கள் முழுமையாக வந்து சேர வாய்ப்பாக அமையும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினா்கள் வி.சுப்புராயன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மு.மருதவாணன், பி.கருப்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொல்.திருமாவளவன் பிரசாரம்: கடலூா் மாநகராட்சியில் 3 வாா்டுகளில் போட்டியிடும் விசிக வேட்பாளா்கள் பா.தாமரைச்செல்வன், மு.சரிதா, புஷ்பலதா ஆகியோரை ஆதரித்து அந்தக் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடலூா் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது என்ற நிலையை உருவாக்க வேண்டும். கட்சியில் நேரடியாக களத்திலிருக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவா்களுக்கு தோ்தலில் வாய்ப்பளித்துள்ளோம். எனவே, விசிக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.