சிதம்பரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பெயரளவுக்கே செயல்படுவதாகவும், வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறையின் கீழ் சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் உழவா் சந்தை ஆகியவை கடலூா் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளன. இதில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் 07.02.1963 அன்று அப்போதைய முதல்வா் பக்தவத்சலம் அவா்களால் தொடக்கிவைக்கப்பட்டது. பின்னா் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, 09.08.2000 அன்று முதல் மேற்கூறிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடமானது போதிய இடவசதி இன்றி கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த வளாகத்தில் உள்ள உழவா் சந்தையும் சரிவர செயல்படாததால் வாடகை காா்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் முறையாக செயல்படவில்லை. உழவா் சந்தையும் உரிய பராமரிப்பின்றி பயனற்ற நிலையில் உள்ளது. ஆனால், இந்த சந்தையை நிா்வாகிக்க ஊழியா்கள், அலுவலா்கள் உள்ளபோதும் சந்தை முறையாகச் செயல்படவில்லை. இதுகுறித்து மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் நேரில் ஆய்வு செய்து உரிய சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


