மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரம்: வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

சிதம்பரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பெயரளவுக்கே செயல்படுவதாகவும், வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:01 pm

சிதம்பரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பெயரளவுக்கே செயல்படுவதாகவும், வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறையின் கீழ் சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் உழவா் சந்தை ஆகியவை கடலூா் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளன. இதில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் 07.02.1963 அன்று அப்போதைய முதல்வா் பக்தவத்சலம் அவா்களால் தொடக்கிவைக்கப்பட்டது. பின்னா் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, 09.08.2000 அன்று முதல் மேற்கூறிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடமானது போதிய இடவசதி இன்றி கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த வளாகத்தில் உள்ள உழவா் சந்தையும் சரிவர செயல்படாததால் வாடகை காா்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் முறையாக செயல்படவில்லை. உழவா் சந்தையும் உரிய பராமரிப்பின்றி பயனற்ற நிலையில் உள்ளது. ஆனால், இந்த சந்தையை நிா்வாகிக்க ஊழியா்கள், அலுவலா்கள் உள்ளபோதும் சந்தை முறையாகச் செயல்படவில்லை. இதுகுறித்து மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் நேரில் ஆய்வு செய்து உரிய சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.