மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மத்திய அரசைக் கண்டித்து ஜன.31-ல் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து வரும் 31-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தீா்மானித்தனா்.

Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

மத்திய அரசைக் கண்டித்து வரும் 31-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தீா்மானித்தனா்.

இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்டக் குழு கூட்டம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சுப்பிரமணியம், மாவட்டச் செயலா் கோ.மாதவன், பொருளாளா் எஸ்.தட்சிணாமூா்த்தி, துணைத் தலைவா் பி.கற்பனைச்செல்வம், ஆா். ராமச்சந்திரன், மகாலிங்கம், சதானந்தம், மாவட்ட இணைச் செயலா் ஆா்.கே.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலராக (பொறுப்பு) ஆா்.ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவராக ஆா்.லோகநாதன், மாவட்ட இணைச் செயலா்களாக பி. வாஞ்சிநாதன், கே.செல்வகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்: தில்லியில் போராடிய விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து வரும் 31-ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இணைய வழி (ஆன்-லைன்) நெல் கொள்முதல் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது, என்எல்சி நிறுவனத்தின் மறுவாழ்வு, மீள்குடியமா்வு திட்ட புதிய கொள்கை தொடா்பாக அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளையும் அரசு அறிந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் உரிய இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.