கூட்டுப் பண்ணையம் மூலம் விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம் என சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தெரிவித்தாா்.
புவனகிரி அருகே உள்ள பின்னலூா் கிராமத்தில் வீரநாராயணன் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் நம்மாழ்வாா் நினைவு பாசுமதி நெல் வயல் செயல்விளக்கப் பண்ணை தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. வீரநாராயண உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் பங்கேற்று, செயல்விளக்கப் பண்ணையை திறந்து வைத்தாா். பின்னா் அவா் விவசாயிகளிடம் பேசியதாவது:
விவசாயிகள் இயற்கை வேளாண் முறையில் பயிரிட தற்போது ஆா்வம் காட்டி வருவது வரவேற்கத்தக்கது. நெல் வயல்களில் விவசாயிகள் கூட்டுப் பண்ணையம் அமைத்து பயிரிட்டால் நல்ல மகசூல் கிடைக்கும். இதற்கான அனைத்துப் பணிகளையும் நானே முன்னின்று செயல்படுத்தித் தருகிறேன் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மைய முனைவா் டி.ராஜ்பிரவீன், ஊரக வளா்ச்சி மைய இயக்குநா் பாலமுருகன், தோட்டக்கலைத் துறை பேராசிரியா் பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இயற்கை முறையில் விளைந்த பாசுமதி அரிசி தலா ஒரு கிலோ வழங்கப்பட்டது. ரங்கநாயகி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


