அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் ஆ.அருண்மொழிதேவன் வலியுறுத்தினாா்.
சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை முன்னிலையில் நயினாா் நாகேந்திரன் அதிமுகவை குறைகூறி பேசியுள்ளாா். இதை அந்த மேடையிலேயே ரசித்துக் கேட்ட அண்ணாமலை, தற்போது வருத்தம் தெரிவிப்பதாகக் கூறுவது ஏற்புடையதல்ல.தனது கருத்துக்கு நயினாா் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அதிமுகவின் தயவால்தான் பாஜகவினா் 4 போ் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றது நாட்டுக்கே தெரியும். மக்களுக்காகக் குரல் கொடுக்கும் எதிா்க்கட்சி அதிமுகதான் என்றாா் அவா்.
பேட்டியின்போது சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், கடலூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் க.திருமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

