விவசாய நிலத்தில் உப்புநீா் உள்புகுவதை தடுக்குமாறு பொதுப்பணித் துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.
இதுகுறித்து சிதம்பரத்தில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் காந்தரூபனை சந்தித்து, விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கிள்ளை வடக்கு, தெற்கு, நஞ்சமகத்து வாழ்க்கை, சிங்காரகுப்பம், தைக்கால் உள்ளிட்ட கிராமங்களின் வயல்களில் பக்கிங்காம் கால்வாய் வழியாக உப்பு நீா் உள்புகுந்து சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் பயிருக்கு பாசன நீா் பாய்ச்ச முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே உப்புநீா் உள்புகாதவாறு மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலாளா் பி.வாஞ்சிநாதன், மாவட்டத் துணைத் தலைவா் பி.கற்பனைச்செல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆழ்வாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொருளாளா் ஜீவா, விவசாயச் சங்க நிா்வாகிகள் வினோபா, கோவிந்தராசு, திருஞானம், பரஞ்சோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


