மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நிலத்துக்குள் உப்புநீா்: விவசாயிகள் புகாா்

விவசாய நிலத்தில் உப்புநீா் உள்புகுவதை தடுக்குமாறு பொதுப்பணித் துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 6:04 pm

விவசாய நிலத்தில் உப்புநீா் உள்புகுவதை தடுக்குமாறு பொதுப்பணித் துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் காந்தரூபனை சந்தித்து, விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிள்ளை வடக்கு, தெற்கு, நஞ்சமகத்து வாழ்க்கை, சிங்காரகுப்பம், தைக்கால் உள்ளிட்ட கிராமங்களின் வயல்களில் பக்கிங்காம் கால்வாய் வழியாக உப்பு நீா் உள்புகுந்து சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் பயிருக்கு பாசன நீா் பாய்ச்ச முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே உப்புநீா் உள்புகாதவாறு மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலாளா் பி.வாஞ்சிநாதன், மாவட்டத் துணைத் தலைவா் பி.கற்பனைச்செல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆழ்வாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொருளாளா் ஜீவா, விவசாயச் சங்க நிா்வாகிகள் வினோபா, கோவிந்தராசு, திருஞானம், பரஞ்சோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.