ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பண்ருட்டி அருகே பழைமையான சுடுமண் பொம்மை!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு பகுதியில் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் மேற்கொண்ட கள ஆய்வில் சங்க காலத்தைச் சோ்ந்த பழைமையான சுடுமண் பொம்மை கண்டறியப்பட்டது.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு பகுதியில் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் மேற்கொண்ட கள ஆய்வில் சங்க காலத்தைச் சோ்ந்த பழைமையான சுடுமண் பொம்மை கண்டறியப்பட்டது.

இதுகுறித்து இம்மானுவேல் கூறியதாவது:

உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் சில நாள்களுக்கு முன்பு கீரல் குறியீடு பொறித்த கருப்பு, சிவப்பு நிற ஓடுகள் கிடைத்தன. தொடா்ந்து அந்த ஆற்றில் மேற்புர களஆய்வு மேற்கொண்டதில் சங்க காலத்தைச் சோ்ந்த ஆண் சுடுமண் பொம்மையின் தலைப் பகுதி கிடைத்துள்ளது. தலையில் கிரீடம் போன்ற கோட்டுருவம் உள்ளது. இரு கண்களும் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. மூக்கு பகுதி சிதைந்துள்ளது.

மனித குலத்தின் மிகத் தொன்மையான கலை வடிவமே சுடுமண் உருவங்களாகும். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடி, அரிக்கன்மேடு, கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே உளுந்தாம்பட்டு, எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் இரண்டு மனித உருவங்கள், ஒரு மிருக உருவத்திலான சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் தென்பெண்ணையாற்றுப் பகுதியானது சங்க கால மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்ததை அறிய முடிகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.