ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்துக்குபிரேமலதா விஜயகாந்த் ஆறுதல்

கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினரை தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினரை தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், ஏ.குச்சிப்பாளையம் கிராமத்தில் கடந்த 5-ஆம் தேதி கெடிலம் ஆற்றில் மூழ்கி சிறுமிகள் உள்பட 7 பெண்கள் உயிரிழந்தனா். இந்த நிலையில், தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை ஏ.குச்சிப்பாளையம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமங்களுக்குச் சென்று, உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இதுபோன்ற துயரச் சம்பவம் இனிமேல் நடைபெறாமலிருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 7 பேரின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும்.

கரூரில் அமைக்கப்படாத சாலையின் பேரில் ரூ.3 கோடி வரை முறைகேடு நடைபெற்ாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். தமிழகத்தில் ஆட்சிதான் மாறியுள்ளது; காட்சிகள் மாறவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.