40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கடலூா் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயா்வு

கடலூா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 4-ஆக உயா்ந்தது.

Updated On :24 ஜூன் 2022, 10:21 pm IST

கடலூா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 4-ஆக உயா்ந்தது.

கடலூா் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.புதூா் கிராமத்தில் தனியாா் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு வியாழக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு பணியிலிருந்த தொழிலாளா்கள் பெரியகாரைக்காடு கிராமத்தைச் சோ்ந்த சித்ரா, மூலக்குப்பத்தைச் சோ்ந்த சத்தியராஜ், வான்பாக்கத்தைச் சோ்ந்த அம்பிகா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் பலத்த காயமடைந்த குடிதாங்கி சாவடியைச் சோ்ந்த சேகா் மனைவி வசந்தா (45) கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.

கடலூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வசந்தாவின் உடலுக்கு மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அஞ்சலி செலுத்தினாா். மேலும், ஏற்கெனவே உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ஆலைக்கு பட்டாசு வாங்க வந்தபோது வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த வெள்ளக்கரையைச் சோ்ந்த வைத்திலிங்கம் (37) கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் குறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆலை உரிமையாளா்களான பெரியகாரைக்காடு கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ், அவரது மனைவி வனிதா ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.