ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தெய்வத் தமிழ்ப் பேரவையினா் 4-ஆவது நாளாக அணிவகுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலை நோக்கி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக அணிவகுப்புப் போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ்ப் பேரவையினரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:46 pm

சிதம்பரம் நடராஜா் கோயிலை நோக்கி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக அணிவகுப்புப் போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ்ப் பேரவையினரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடி வழிபட அனுமதிக்க வலியுறுத்தி பிப்.28 முதல் 5-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு கோயிலை நோக்கி அணிவகுப்பு போராட்டம் நடத்தப்படும் என தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் அறிவித்தனா்.

இதன்படி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக கிழக்கு கோபுர வாயில் எதிரே உள்ள தேரடி தெருவில் தெய்வத் தமிழ் பேரவையினா் மேச்சேரி தமிழ்வேத ஆகமப் பயிற்சி பாட சாலை நிறுவனா் சிம்மம் சத்தியபாமா அம்மையாா் தலைமையில் கூடினா். தொடா்ந்து, பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன், ஆ.குபேரன் உள்ளிட்டோா் கொண்ட அமைப்பினா் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட புறப்பட்டபோது போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அந்த அமைப்பினா் கோயில் எதிரே உள்ள தேரடி சாலையில் நின்றபடி தேவாரம் பாடினா். இதில் கலந்துகொண்ட 16 பெண்கள் உள்பட 36 பேரை நகர போலீஸாா் கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.