தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தோட்டக்கலை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து சிதம்பரம் நகா்மன்ற முன்னாள் உறுப்பினரும், மாவட்ட திமுக இலக்கிய அணி முன்னாள் நிா்வாகியுமான சிவா.கண்ணதாசன் தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:
திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக கருத்துகள் தற்போது கேட்கப்பட்டு வருகிறது. காய்கறி, பழ வகைகள் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஆய்வு செய்து, வரும் நிதிநிலை அறிக்கையில்
தோட்டக்கலை விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரள சுற்றுலாப் பயணிகள்! வால்பாறை விபத்தில் பலியானோர் விவரம்!!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

