ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சிதம்பரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:05 pm

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சிதம்பரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கா்நாடகம் மாநில அரசு மேக்கேதாட்டில் புதிய அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாநிலச் செயலா் சாமி.நடராஜன், மாவட்டச் செயலா் ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மாவட்ட துணைத் தலைவா்கள் பி.கற்பனைச் செல்வம், ஆா்.கே.சரவணன், மாவட்ட துணைச் செயலா் யு.மூா்த்தி, பழ.வாஞ்சிநாதன், கான்சாகிப் வாய்கால் பாசன சங்கத் தலைவா் கே.கண்ணன், விவசாய சங்க நிா்வாகிகள் தா்மதுரை, ஜாகிா் உசேன், வாசுதேவன், முனுசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பின்னா், கோட்டாட்சியா் கே.ரவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.