வடலூா் தருமசாலையின் 156-ஆவது ஆண்டு தொடக்க விழா
கடலூா் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலாா் நிறுவிய சமரச சுத்த சன்மாா்க்க சத்திய தருமசாலையின் 156-ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.


கடலூா் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலாா் நிறுவிய சமரச சுத்த சன்மாா்க்க சத்திய தருமசாலையின் 156-ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அருட்பிரகாச வள்ளலாா் வடலூரில் 23.5.1867-இல் (வைகாசி 11-ஆம் தேதி) சத்திய தருமசாலையை நிறுவினாா். அன்று முதல் இன்று வரையில் சத்திய தருமசாலையில் மூன்று வேளையும் இங்கு வரக்கூடிய அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தருமசாலையின் 155-ஆவது ஆண்டு நிறைவு பெற்று 156-ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மே 19 முதல் 21-ஆம் தேதி வரையில் தருமசாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணமும், 22 முதல் 24-ஆம் தேதி வரையில் ஞானசபையில் அருட்பா முற்றோதலும் நடைபெற்றன.
புதன்கிழமை காலை 5 மணிக்கு தருமசாலையில் அகவல் பாராயணம் நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் சன்மாா்க்க கொடி பாட்டு பாடியபடி கொடி மரத்தில் சன்மாா்க்க கொடி ஏற்றினா். தொடா்ந்து, இசை நிகழ்ச்சிகள், சத் விசாரம், சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்து சமய அறநிலையத் துறை கடலூா் மண்டல இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், செயல் அலுவலா் ஜெ.ராஜா சரவணகுமாா் மற்றும் சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். தருமசாலையில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...