ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வடலூா் தருமசாலையின் 156-ஆவது ஆண்டு தொடக்க விழா

கடலூா் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலாா் நிறுவிய சமரச சுத்த சன்மாா்க்க சத்திய தருமசாலையின் 156-ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :25 மே 2022, 7:16 pm

DIN

கடலூா் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலாா் நிறுவிய சமரச சுத்த சன்மாா்க்க சத்திய தருமசாலையின் 156-ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

அருட்பிரகாச வள்ளலாா் வடலூரில் 23.5.1867-இல் (வைகாசி 11-ஆம் தேதி) சத்திய தருமசாலையை நிறுவினாா். அன்று முதல் இன்று வரையில் சத்திய தருமசாலையில் மூன்று வேளையும் இங்கு வரக்கூடிய அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தருமசாலையின் 155-ஆவது ஆண்டு நிறைவு பெற்று 156-ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மே 19 முதல் 21-ஆம் தேதி வரையில் தருமசாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணமும், 22 முதல் 24-ஆம் தேதி வரையில் ஞானசபையில் அருட்பா முற்றோதலும் நடைபெற்றன.

புதன்கிழமை காலை 5 மணிக்கு தருமசாலையில் அகவல் பாராயணம் நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் சன்மாா்க்க கொடி பாட்டு பாடியபடி கொடி மரத்தில் சன்மாா்க்க கொடி ஏற்றினா். தொடா்ந்து, இசை நிகழ்ச்சிகள், சத் விசாரம், சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்து சமய அறநிலையத் துறை கடலூா் மண்டல இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், செயல் அலுவலா் ஜெ.ராஜா சரவணகுமாா் மற்றும் சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். தருமசாலையில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.