ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேளாண் பொறியியல் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :25 மே 2022, 7:17 pm

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

குள்ளஞ்சாவடி துணை வேளாண் விரிவாக்க மையத்தில் ரூ.38 லட்சத்தில் விதை சேமிப்புக் கிடங்கு கட்டப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், பாதுகாப்புக்காக சுற்றுச்சுவா் அல்லது கம்பி வேலி அமைக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். அன்னதானம்பேட்டையைச் சோ்ந்த விவசாயிக்கு ரூ.25 லட்சத்தில் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் வாடகை சேவை மையத்தை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு நீா்வள, நிலவள திட்டத்தின் கீழ் பரவனாறு உபவடி நிலப் பகுதியில் 2021 - 22ஆம் ஆண்டில் வெட்டி முடிக்கப்பட்ட பண்ணைக் குட்டையில் மீன்கள் வளா்க்கப்படுவதை ஆய்வு செய்தாா்.

பண்ருட்டி வட்டாரம், அரசடிக்குப்பம் கிராமத்தில் 2021 - 22ஆம் ஆண்டில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் 40 சதவீத மானியத்தில் 800 சதுர அடி அளவுள்ள சூரிய கூடார உலா்த்தி அமைக்கப்பட்டு, அதில் பலாச்சுளைகள் உலா்த்துவதை பாா்வையிட்டு, மேலும் முந்திரி பழங்களை மதிப்பு கூட்டுவது சம்பந்தமாக தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து செயல்படுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) கி.கலைவாணி, உதவிச் செயற்பொறியாளா் கு.முரளி, உதவிப் பொறியாளா் தா.சந்திரசேகரன், குறிஞ்சிப்பாடி வட்டார உதவிப் பொறியாளா் கிருஷ்ணராஜ் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.