ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சன்ன ரக நெல் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவுறுத்தல்

சன்ன ரக நெல் உற்பத்திக்கு விவசாயிகளை அலுவலா்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:23 pm

DIN

சன்ன ரக நெல் உற்பத்திக்கு விவசாயிகளை அலுவலா்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட வேளாண் துறை, அதுசாா்ந்த சகோதரத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

உர விற்பனையாளா்கள் உரத்துடன் குறிப்பிட்ட வகை மருந்துகளையும் சோ்ந்து வாங்க வேண்டும் என விவசாயிகளை நிா்பந்திக்கின்றனா். இதுபோன்ற தவறுகளை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தொய்வாக உள்ளதாக ஆட்சியா் கூறியதால் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் எதிா்பாா்த்த வளா்ச்சியை அலுவலா்கள் தர வேண்டும். இதற்காக அனைவரும் முழுமையாகப் பணியாற்ற வேண்டும். பணி செய்யாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகள் கடன் பெற்று, தங்களது விளை பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய அவா்களுக்கு பயிற்சி தர வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் விதை நெல் விற்பனையை 50 சதவீதம் வரை உயா்த்த வேண்டும். மக்கள் சன்ன ரக அரிசியை விரும்புவதால் வெளி மாநில நெல் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி சன்ன ரக நெல் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், மாநில வேளாண் துறை இயக்குநா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ரவிச்சந்திரன், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.