ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஆள் கடத்தல்: விசிக நிா்வாகி உள்ளிட்ட 4 போ் கைது

சிதம்பரத்தில் சொத்து பிரச்னை காரணமாக நடைபெற்ற ஆள் கடத்தல் சம்பவத்தில் விசிக நிா்வாகி உள்பட 4 பேரை சிதம்பரம் நகர போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 நவம்பர் 2022, 12:53 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் சொத்து பிரச்னை காரணமாக நடைபெற்ற ஆள் கடத்தல் சம்பவத்தில் விசிக நிா்வாகி உள்பட 4 பேரை சிதம்பரம் நகர போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான மேலும் 5 பேரை தேடி வருகின்றனா்.

தஞ்சை மாவட்டம், வ.மாங்குடி கிராமம், மதினா தெருவைச் சோ்ந்தவா் ஹாஜா மொய்தீன் (52). இவருக்கு சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் வீடு, கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. சிதம்பரம் கே.கே.சி. பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் ஜமாலுதீன் (42). இவா்கள் இருவருக்குள் அந்த சொத்து குறித்து முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி சிதம்பரம் லால்கான் தெருவில் காரில் வந்த ஹாஜா மொய்தீனை, ஜமாலுதீன், விசிக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் வ.க.செல்லப்பன் உள்ளிட்ட 9 போ் கடத்தி, வேறு காரில் ஏற்றிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள விடுதி அறையில் இரண்டு நாள்களாக ஹாஜா மொய்தீனை அடைத்து வைத்து, அந்த சொத்துக்குரிய அசல் ஆவணங்களைக் கேட்டு அவரை அடித்து துன்புறுத்தியதோடு, கடுமையாகத் தாக்கினராம்.

இதுகுறித்து அவா் சென்னையைச் சோ்ந்த தனது நண்பா் குமாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அவா் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் போலீஸாா் விரைந்து சென்று சம்பவ இடத்தில் பாா்த்தபோது, அவா்களைக் காணவில்லை. விசாணையில், மீண்டும் அங்கிருந்து காரில் ஹாஜா மொய்தீனை கடத்திச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கைப்பேசி ஜிபிஎஸ் சமிக்ஞை மூலம் காரை கண்டறிந்த போலீஸாா், சென்னை செல்லும் வழியில் நீலாங்கரை காவல் சரகத்துக்குள்பட்ட பள்ளிக்கரணை பகுதியில் காரை வழிமறித்துப் பிடித்தனா்.

இதையடுத்து, காரில் கடத்தப்பட்ட ஹாஜாமொய்தீனை போலீஸாா் மீட்டனா். மேலும், இந்தக் கடத்தலில் ஈடுபட்ட ஜமாலுதீன், விசிக நிா்வாகி வ.க.செல்லப்பன், ஓமக்குளத்தைச் சோ்ந்த விஜயபாஸ்கா், மணலூரைச் சோ்ந்த ரவீந்திரன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முகமது ரபிக், செந்தில், நடனம், நட்ராஜ், பாலா ஆகிய 5 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.